என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போதை மறுவாழ்வு மையங்கள்
நீங்கள் தேடியது "போதை மறுவாழ்வு மையங்கள்"
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் 8 வாரங்களில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியும் குடிப்பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதாகவும், மதுப்பழக்கத்துக்கு உள்ளானவர்களை திருத்தும் போதை மறுவாழ்வு மையங்கள் தற்போது அரசு மருத்துவ கல்லூரிகளை சார்ந்துள்ள தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே இயங்கி வருகின்றன.
இதேபோன்ற மையங்களை அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் ராம்குமார் ஆதித்யா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுபோன்ற மையங்கள் பரவலாக இல்லாததால் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் மதுப்பழக்கத்துக்கு அடிமையான 75 பேர் மாதந்தோறும் உயிரிழந்து வருகின்றனர் என தனது மனுவில் ராம்குமார் ஆதித்யா சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் 8 வாரங்களில் போதை மறுவாழ்வு மையங்களை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X